தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் :

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று நடந்தது.
Updated on
1 min read

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 29 ஆயிரத்து 536 பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு மற்றும் அரூர் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று (16-ம் தேதி) தொடங்கி வருகிற 23-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இத் தேர்வுகள் 157 மையங்களில் நடைபெறுகிறது. இதில், 9742 மாணவியர் மற்றும் 9498 மாணவர்கள் என மொத்தம் 19240 மாணவ, மாணவியர் எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இத் தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி

செய்முறைத் தேர்வை தலைமை ஆசிரியர் சேரலாதன் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in