திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் - 68 பேருக்கு கரோனா தொற்று :

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில்   -  68 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 68 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,315-ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 1,727 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் கண் காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர். 140 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளிகள் 24 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in