கரோனா தொற்று பரவல் காரணமாக - மலை ரயிலில் 17 பேர் மட்டுமே பயணம் : குன்னூர்-உதகைக்கு 308 இருக்கைகள் காலி

கரோனா தொற்று பரவல் காரணமாக -  மலை ரயிலில் 17 பேர் மட்டுமே பயணம் :  குன்னூர்-உதகைக்கு 308 இருக்கைகள் காலி
Updated on
1 min read

கோடை சீசனில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலைரயிலில் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வந்த நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக நேற்று 17 பேர்மட்டுமே குன்னூரிலிருந்து உதகைக்குபயணம் மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில், கோடை சீசனுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மார்ச்முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், ரயில், பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. செப்டம்பர் முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால், தற்போது மீண்டும் கரோனாபரவலால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கோடை சீசன் காலத்தில் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் குன்னூர் ரயில் நிலையம், சுற்றுலாபயணிகளின்றி வெறிச்சோடி காணப் படுகிறது. குன்னூரிலிருந்து உதகை வந்த மலை ரயிலில் 17 பேர் மட்டுமே பயணி்த்தனர். 308 இருக்கைகள் காலியாக இருந்தன.மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளுடன் குன்னூரில் இருந்து உதகை வந்த மலை ரயில்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in