கடலூர் மாவட்டத்தில் - முகக்கவசம் அணியாத 8,506 பேருக்கு அபராதம் :

சிதம்பரத்தில் பேருந்தில்  முகக்கவசம் அணிந்து  பயணம் செய்கிறார்களா என்று போலீஸார் ஆய்வு செய்தனர்.
சிதம்பரத்தில் பேருந்தில் முகக்கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா என்று போலீஸார் ஆய்வு செய்தனர்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 8,506 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட நிர்வாகம்,காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை முகக்கவசம் அணியாத 8 ஆயிரத்து 506 பேருக்கும்,சமூக இடைவெளியை பின்பற்றாத 149 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 15 லட்சத்து 98 ஆயிரத்து 400 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ரூ. 15 லட்சத்து 98 ஆயிரத்து 400 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in