பரங்கிப்பேட்டையில் கல்லூரி மாணவி மாயம் :

பரங்கிப்பேட்டையில்  கல்லூரி மாணவி மாயம் :
Updated on
1 min read

பரங்கிப்பேட்டையில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தாயார் போலீஸில் புகார் செய்துள்ளார்.

பரங்கிப்பேட்டை கச்சேரி தெரு பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அவர் வெளியே சென்று வருவதாக தயாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது தாயார் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவரது தாயார் நேற்று பரங்கிப்பேட்டை போலீஸில் புகார் செய்தார்.

அதில் தனது மகள் மாயமானது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in