பெண்ணை தாக்கி 14 பவுன் வழிப்பறி :

பெண்ணை தாக்கி       14 பவுன் வழிப்பறி  :
Updated on
1 min read

திருவாடானை அருகே பெண்ணை தாக்கி மர்ம நபர்கள் 14 பவுன் நகையை பறித்து சென்றனர்.

திருவாடானை அருகே காற்காத்தகுடியைச் சேர்ந்த ராமு மனைவி புஷ்பவள்ளி(55). இவர் காற்காத்தகுடியில் கடை நடத்தி வருகிறார். கடையில் இருந்து புஷ்பவள்ளி நேற்று முன்தினம் நடந்து வீட்டுக்குச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், புஷ்பவள்ளியைத் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்றனர்.

ஆனால் அவர்களிடம் இருந்து நகையை காக்க புஷ்பவள்ளி போராடினார். இருந்தபோதும் அவர் அணிந்திருந்த 2 தங்க சங்கிலி உட்பட 14 பவுன் நகைகளை திருடர்கள் பறித்துச் சென்றனர். புஷ்பவள்ளிக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவாடானை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in