நகராட்சி அதிகாரி வீட்டில் 91 பவுன் நகைகள் திருட்டு :

நகராட்சி அதிகாரி வீட்டில்  91 பவுன் நகைகள் திருட்டு :
Updated on
1 min read

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், நமணசமுத்திரத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி பூர்ணவள்ளி(56). இவர், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தணிக்கை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால், குடும்பத்தினர் அனைவரும் நமணசமுத்திரத்தில் உள்ள இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு கடந்த மாதம் 8-ம் தேதி சென்றுவிட்டனர்.

இந்நிலையில், திருவப்பூரில் உள்ள வீட்டுக்கு பூர்ணவள்ளி நேற்று வந்து பார்த்தபோது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் பெட்டிகளில் இருந்த 91 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in