இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது :

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது  :
Updated on
1 min read

ஆரணி அருகே இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த புனலப்பாடி கிராமத்தில் வசித்தவர் சக்திவேல்(27). இவர், உட்பட 3 பேரும் கடந்த 8-ம் தேதி வழிப்பறி செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பித்துச் செல்லும்போது சிக்கியதாக கூறி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சக்திவேல் மட்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 10-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில், சக்தி வேலை அடித்துக் கொலை செய்துவிட்டதாக கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரணி நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, சக்திவேலின் தாயார் அலமேலுவிடம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.4,12,500-க்கான காசோலையை கோட்டாட்சியர் பூங்கொடி வழங்கினார்.

இது குறித்து அலமேலு கொடுத்த புகாரின் பேரில் புனலப்பாடி கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணன் மற்றும் பரசுராமனை காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த வேலுவை நேற்று முன் தினம் இரவு கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in