திருநேர் அண்ணாமலையார் கோயிலில் - மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு :

திருவண்ணாமலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தி.மலை கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இங்கு ஒவ் வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு நாளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மூலவர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி, தமிழ் வருடப் பிறப்பான நேற்று காலை சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வை கண்டு சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முன்னதாக திருநேர் அண்ணா மலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.

காலை 7 மணியளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. அப்போது, அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்ட னர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in