திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தந்தை காலமானார் :

கூ.பால்சாமி
கூ.பால்சாமி
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவின் தந்தை கூ.பால்சாமி(97). விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி வட்டம் சித்தனேந்தல் கிராமத்தில் வசித்து வந்த பால்சாமி, வயது முதிர்வு காரணமாக நேற்று காலை காலமானார்.

இவரது இறுதிச் சடங்கு இன்று (ஏப். 14) சித்தனேந்தல் கிராமத்தில், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற உள்ளது.

காலமான பால்சாமிக்கு, தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரிய முன்னாள் தலைவரும், மதுரை திமுக பகுதி செயலருமான அக்ரி கணேசன், சித்தனேந்தல் அதிமுக செயலர் ராஜேந்திரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் ஜெயபெருமாள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in