குமாரபாளையத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் :

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களிடம் காவல் துறையினர் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களிடம் காவல் துறையினர் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

குமாரபாளையம் காவல் துறை சார்பில் பேருந்து நிலைய வளாகத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. காவல் ஆய்வாளர் ரவி தலைமை வகித்தார்.

அப்போது, ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் அதிக நபர்கள் அமர வைக்கக்கூடாது. அரசு விதிமுறைப்படி மட்டுமே ஆட்களை ஏற்ற வேண்டும். பயணிகளுக்கு கிருமிநாசினி வழங்கி, சமூக இடைவெளியை பின்பற்ற வைக்க வேண்டும்.

முகக் கவசம் இல்லாத பயணிகளை வாகனங்களில் ஏற்றக்கூடாது. சுடுநீர் குடிக்க வேண்டும். குளிர் பானங்கள் தவிர்க்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இதில் குமாரபாளையம் காவல் நிலையத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in