திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு :

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திருமாந்துறையில் ஒன்றியச் செயலாளர் தி.மதியழகன் தலைமையில் நேற்று முன்தினம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருமான குன்னம் சி.ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மோர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைவழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அ.கருணாநிதி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அழகு.நீலமேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, வேப்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் குன்னம் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in