திண்டுக்கல்லில் பால் வியாபாரி கொலை :

திண்டுக்கல்லில் பால் வியாபாரி கொலை :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(50). இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் பால் விநியோகித்துவிட்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். மாலப்பட்டி அருகே சென்றபோது, முருகேசனை வழிமறித்த சிலர் ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பினர். இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீஸார், சந்தேகத்தின் அடிப்படையில் 9 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in