பெரியகோவிலான்குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு :

பெரியகோவிலான்குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு :
Updated on
1 min read

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான்குளத்தைச் சேர்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்டஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர்அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ளமனுவில், “பெரியகோவி லான்குளத்தில் உள்ள தெருக்கள் ஆக்கிரமிப்பால் அகலம் குறைந்துவிட்டன. இதனால் தெருக்களில் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் செல்வது சிரமமாக உள்ளது. அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஆக்கிரமிப்பு செய்துள்ள வர்களை தட்டிக்கேட்டால் தகராறு செய்கிறார்கள். எனவே, போக்குவரத்து சீரான முறையில் நடைபெற ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக தெருக்களில் கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். இதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in