மாநில அரசின் ஓய்வூதியர்களுக்கு வரும் ஜூலை முதல் நேர்காணல் : வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

மாநில அரசின் ஓய்வூதியர்களுக்கு வரும் ஜூலை முதல் நேர்காணல் :  வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர் களுக்கான நேர்காணல் வரும் ஜூலை முதல் தொடங்குகிறது என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதி யர்கள் கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருடாந்திர நேர்காணல் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மட்டும் பொருந்தும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், ராணுவம், அஞ்சல், ரயில்வே, மின்வாரியம், உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இது பொருந் தாது’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in