திருப்புவனம் அருகே தேர்தல் மோதலில் அதிமுக பிரமுகரின் தந்தை மரணம் :

திருப்புவனம் அருகே தேர்தல் மோதலில் அதிமுக பிரமுகரின் தந்தை மரணம் :
Updated on
1 min read

மானாமதுரை தொகுதி திருப்புவனம் அருகே வயல்சேரியில் வாக்குப்பதிவு அன்று (ஏப்.6) திமுக கிளைச் செயலாளர் சக்திவேல் தரப்புக்கும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஏப்.7-ம் தேதி இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் திமுக தரப்பில் சக்திவேல், அவரது மனைவி முத்துப்பேச்சி ஆகியோர் காயமடைந்தனர். அதேபோல் அதிமுக தரப்பில் ராமகிருஷ்ணன் தந்தை நாராயணன் (75), அம்பலம் (60) ஆகியோர் காயமடைந்தனர். பழையனூர் போலீஸார் இரு தரப்பிலும் 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காயமடைந்த நாராயணன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in