அந்தியூர் பேரூராட்சி பகுதியில் - தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு :

அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்புத் துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்புத் துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Updated on
1 min read

அந்தியூர் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தியூர் பேரூராட்சி யில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்புத் துறை வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேசுராஜ் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் அந்தியூர் பேருந்து நிலையம், ரவுண்டானா, பர்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in