தூத்துக்குடியில் 3 முன்மாதிரி தடுப்பூசி மையங்கள் : 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அழைப்பு

தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாமல் வந்த நபரை காவல் துறையினர் வழிமறித்து அபராதம் விதித்தனர். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாமல் வந்த நபரை காவல் துறையினர் வழிமறித்து அபராதம் விதித்தனர். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்களில் மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.24,200 அபராதம்

தயக்கம் வேண்டாம்

இந்த மூன்று மையங்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும். தினமும் தலா 100 பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தொழில் நிறுவனங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்களை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சில நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நிறுவன ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in