ஒரே நாளில் ரூ.4.92 லட்சம் அபராதம் :

ஒரே நாளில் ரூ.4.92 லட்சம் அபராதம்  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 572 பேர், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 212 பேர்,திருச்செந்தூரில் 258 பேர், வைகுண்டத்தில் 200 பேர், மணியாச்சியில் 261 பேர், கோவில்பட்டியில் 401 பேர், விளாத்திகுளத்தில் 387 பேர் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 170 பேர் என மொத்தம் 2,461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.4,92,200 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 52 பேருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in