பெருந்துறை அதிமுக வேட்பாளருக்கு கரோனா :

பெருந்துறை அதிமுக வேட்பாளருக்கு கரோனா   :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம், பெருந்துறைத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் எஸ்.ஜெயக்குமார்(42). சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக பல்வேறு இடங் களில் பிரச்சாரம் மேற்கொண்ட இவர், வாக்குப்பதிவு நடந்த 6-ம் தேதியன்று பொன்முடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குப்பதிவினை பார்வையிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை யடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றார். மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 10 நாட்கள் தனிமையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவமனையில், ஜெயக்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in