வேலூர் மாவட்டத்தில் : 8,050 தபால் வாக்குகள் பதிவு :

வேலூர் மாவட்டத்தில் : 8,050 தபால் வாக்குகள் பதிவு :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 8,050 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படை யில் பணிபுரியும் வீரர்கள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி 20 ஆயிரத்து 61 பேருக்கு தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்டத்தில் நேற்று (8-ம் தேதி) நிலவரப்படி காட்பாடி தொகுதியில் 1,933 தபால் வாக்குகள், வேலூர் தொகுதியில் 1,771 வாக்குகள், அணைக்கட்டு தொகுதியில் 1,575 வாக்குகள், கே.வி.குப்பம் தொகுதியில் 1,550 வாக்குகள், குடியாத்தம் தொகுதியில் 1,221 வாக்குகள் என மொத்தம் 8,050 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

எனவே, தபால் வாக்குச்சீட்டு பெற்ற வர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வரும் மே 2-ம் தேதி காலை 7.59 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in