

திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் அறையில் பலத்த பாதுகாப்புடன் நேற்று வைக்கப்பட்டன.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை என 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 6-ம்தேதி தேர்தல் நாளன்று பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர்- பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ரவிசங்கர பிரசாத், சந்தர் பிரகாஷ் வர்மா, உமா நந்தா டோலி, மாஷீர் ஆலம், கபில்மீனா, மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் முன்னிலையில், ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம்மற்றும் வி.வி.பேட் ஆகிய இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டன. மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், காவல்கண்காணிப்பாளர் திஷா மித்தல்,வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மூன்றடுக்கு பாதுகாப்பு
நீலகிரி மாவட்டம்