சென்னை செல்ல பேருந்துகள் இல்லாததால் விழுப்புரத்தில் பயணிகள் சாலை மறியல் :

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்.
Updated on
1 min read

தமிழக சட்டசபைத்தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டுமென தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

சென்னையில் பணியாற்றுபவர்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அவர்கள் வாக்களித்துவிட்டு மீண்டும் சென்னை செல்ல நேற்று பிற்பகல் முதல் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினர். மேலும் கிடைத்த பேருந்துகளில் நின்றுகொண்டும் பயணித்தனர்.

இதற்கிடையே நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு மேல் சென்னை செல்ல பேருந்துகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. தென் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட பேருந்துகள் விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக சென்னைக்குச் சென்றது.

நள்ளிரவு 1 மணி கடந்தும் பேருந்துகள் வராததால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் போக்குவரத்து துறை அலுவலர்களிடம் பேசி 3 பேருந்துகளை இயக்க கேட்டுக்கொண்டனர். அதன்படி இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் புறப்பட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in