

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 3,001 வாக்கு சாவடி மையங்களில் நேற்று முன்தினம் தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கடலூர் பெரியார் அரசு கல்லூரியிலும், காட்டுமன்னார்கோவில்(தனி), சிதம்பரம், புவனகிரி தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கல்லூரியிலும், நெய்வேலி, பண்ருட்டிதொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியிலும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில்வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்னிலையில் சீல் வைக்கப் பட்டது.
விழுப்புரம்