மேலூர், விக்கிரமங்கலம் அருகே விபத்து காகித வியாபாரி உட்பட 2 பேர் உயிரிழப்பு :

மேலூர், விக்கிரமங்கலம் அருகே விபத்து காகித வியாபாரி உட்பட 2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற போது, மதுரை- திருச்சி நோக்கிச் சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகிலுள்ள பூலக்காப்பட்டியைச் சேர்ந்தவர் அருவராஜ் (55). நேற்று முன்தினம் தனது மனைவி கோடியம்மாளுடன் உத்தப்பநாயக்கனூருக்கு பைக்கில் சென்றார். பூலக்காப்பட்டி சிமெண்ட் ரோட்டில் சென்ற போது, எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அருவராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in