

தருமபுரி மாவட்டத்தில் 82.35 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித் துள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 82.35 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதேபோல, பாலக்கோடு தொகுதியில் 87.37 சதவீதம், பென்னாகரத்தில் 84.26 சதவீதம், தருமபுரியில் 79.73 சதவீதம், பாப்பிரெட்டிப் பட்டியில் 82.10 சதவீதம், அரூரில் 78.59 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 5 தொகுதிகளிலும் சேர்த்து 12 லட்சத்து 67ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10 லட்சத்து 43ஆயிரத்து 658 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கரோனா தொற்று காரணமாக மூத்த வாக்காளர்கள் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் தபால்வாக்கு செலுத்தும் வாய்ப்பை அளித்தது.எனவே, மாவட்டத்தில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகள் எண்ணிக்கையையும் இத்துடன் சேர்த்தால் மாவட்ட வாக்குப்பதிவு சதவீதம் சற்றே அதிகரிக்கக்கூடும். கடந்த 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தருமபுரி மாவட் டத்தில் 85.03 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.
வேப்பனப்பள்ளியில் அதிகம்
ஊத்தங்கரை தொகுதியில் 78.4 சதவீதம், பர்கூரில் 79.1 சதவீதம், கிருஷ்ணகிரியில் 78.5 சதவீதம், வேப்பனப்பள்ளியில் 81.3 சதவீதம், ஓசூரில் 70.1 சதவீதம், தளியில் 77.1 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. 6 தொகுதிகளில் வேப்பனப்பள்ளியில் அதிகபட்சம் 81.3 சதவீதம் வாக்குபதிவானது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 78.38 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.