பாப்பாகுடி அருகே தம்பதி கொலை :

பாப்பாகுடி அருகே தம்பதி கொலை  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி அருகே குடும்பத் தகராறில் மகள் மற்றும் மருமகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக தந்தையை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பாப்பாகுடி அருகே நந்தன்தட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் புலேந்திரன் (55). இவரது மகள் மஞ்சு (26), மருமகன் செல்வம் (29). புலேந்திரனுக்கும் செல்வத்துக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் குடிபோதையில் இருந்த புலேந்திரனுக்கும் செல்வத்துக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் செல்வம், மஞ்சு ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக புலேந்திரனை பாப்பாகுடி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தென்காசி

இது தொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருமுறை மல்லிகா, தனது கணவர் மீது புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் மல்லிகா நேற்று தனது அலுவலகத்தில் இருந்தபோது, உள்ளே புகுந்த ராஜகோபால், அவரை கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க முயன்ற மாரியம்மாள் (45) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி மல்லிகா உயிரிழந்தார். ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மல்லிகா நேற்று தனது அலுவலகத்தில் இருந்தபோது, உள்ளே புகுந்த ராஜகோபால், அவரை கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க முயன்ற மாரியம்மாள் (45) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in