வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றிய தன்னார்வலர்கள் உணவின்றி தவிப்பு :

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றிய தன்னார்வலர்கள் உணவின்றி தவிப்பு :
Updated on
1 min read

இவர்கள் காலை 6 மணிக்கே பணியாற்ற வந்துள்ளனர். இவர்களுக்கு காலை 11 மணி ஆகியும் காலை உணவு வழங்கப்படவில்லை. ஆனால், வாக்குச்சாவடியில் பணியாற்றிய மற்ற அலுவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. உணவு வேண்டி சக அலுவலர்களிடம் கேட்டால் உங்களுக்கு யார் பணி வழங்கினார்களோ அவர்களிடம் சென்று பெற்றுக் கொள்ளுங்கள் என பதிலளித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, தன்னார்வலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in