

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நேற்று விறு விறுப்பான வாக்குகள் பதிவானது. பெரிய அளவில் சர்ச்சைகள் இல்லாமல் வாக்குப்பதிவு நிறை வடைந்தது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில், மொத்தம் 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்காளர்கள். இவர்களுக்காக, 1,783 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 70 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியி லும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவை தொடங்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அதற்கு ஏற்ப காலை 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப் பதிவுகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
5 சட்டப்பேரவைத் தொகுதி களில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி காட்பாடியில் 10.2 சதவீதமும், வேலூரில் 10.8 சதவீதமும், அணைக்கட்டில் 10.3 சதவீதமும், கே.வி.குப்பத்தில் 8.21 சதவீதமும், குடியாத்தத்தில் 8.5 சதவீதமும் இருந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி காட்பாடி யில் 67.5 சதவீதமாகவும், வேலூரில் 57.6, அணைக்கட்டில் 71, கே.வி.குப்பத்தில் 67.38, குடியாத்தத்தில் 62.15 சதவீதமாக இருந்தன.
30 இயந்திரங்கள் மாற்றம்
தேர்தல் பாதுகாப்புப் பணியில் 7 கம்பெனி துணை ராணுவப் படையினர், 470 சிறப்பு காவல் படையினர், 733 காவலர்கள் மற்றும் காவலர்கள் அல்லாதவர்கள் 1,050 பேர் என மொத்தம் 2,749 பேர் ஈடுபட்டனர்.
விறுவிறு வாக்குப்பதிவு
கரோனா தடுப்புப் பணி
சமூக இடைவெளி கேள்விக்குறி
ராணிப்பேட்டை மாவட்டம்
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 6 கம்பெனியைச் சேர்ந்த 490 துணை ராணுவப் படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 280 பேர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு விவரம்
அதிமுக வேட்பாளர் மீது புகார்
வாக்கு எண்ணும் மையங்கள்
மேற்கண்ட மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை பாதுகாப்பாக வைத்து அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்' வைக்கப் படும். வரும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.