அரியலூர் மாவட்டத்தில் ரூ.6.95 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் :

அரியலூர் மாவட்டத்தில் ரூ.6.95 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் இதுவரை ரூ.6.95 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.6,73,46,196 ரொக்கம், ரூ.16,80,000 மதிப்பிலான 3,360 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால், ரூ.6,59,05,200 ரொக்கம் திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.14,40,996 மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. 3,360 குக்கர்களும் மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயங்கொண்டம் தொகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.5,08,050 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் ரூ.3,82,250 உரிய நபர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1,25,800 ஜெயங்கொண்டம் கருவூலத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in