

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட உப்பிலியபுரம் பகுதியில் வாக் காளர்களுக்கு பணம் விநியோகித் ததாக அதிமுக, திமுகவைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உப்பிலியபுரம் அன்பு நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு வாக்க ளிக்க பணம் கொடுப்பதாக வந்த தகவலையடுத்து பறக்கும் படையினர் அந்த பகுதியில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு திமுகவுக்கு வாக்களிப் பதற்காக வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக தீபன் ராஜ் என்பவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து ரூ.68,550 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, உப்பிலியபுரம் எஸ்.என்.புதூரில் அதிமுகவைச் சேர்ந்த அண்ணாதுரை என்ப வர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தபோது பறக் கும் படையினர் அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து அதிமுகவினருக்கு பணம் பட்டுவாடா செய்த குறிப்புகள் அடங்கிய நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. உப்பிலியபுரம் போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பெரம்பலூரில் 2 பேர் கைது...
கரூரில்...