ஈஸ்டர் திருநாளையொட்டி - தேவாலயங்களில் : சிறப்பு பிரார்த்தனை :

ஈஸ்டர் திருநாளையொட்டி -  தேவாலயங்களில் : சிறப்பு பிரார்த்தனை  :
Updated on
1 min read

ஈஸ்டர் திருநாளையொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.

வேலூரில் உள்ள சிஎஸ்ஐ மத்திய ஆலயம், ரவுண்டானா பகுதியில் உள்ள புனித விண்ணரசி மாதா தேவாலயம், பாகாயம் பகுதியில் உள்ள தேவாலயம், காட்பாடி காந்தி நகர் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், சீக்ரெட் ஹார்ட் தேவாலயம் மற்றும் செங்குட்டை அடுத்த பர்னீஸ்புரம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

அதேபோல, ராணிப் பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஈஸ்டர் பெருவிழாவையொட்டி அனைத்து தேவாலயங் களிலும் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது.

இதிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in