திண்டுக்கல் கல்லூரியில் ஆராய்ச்சி கழக முப்பெரும் விழா :

திண்டுக்கல் கல்லூரியில்  ஆராய்ச்சி கழக முப்பெரும் விழா   :
Updated on
1 min read

திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரி யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் முப்பெரும்விழா கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் மா.பொன்னையா வரவேற்றார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக கையேட்டினை கல்லூரி இயக்குனர் துரைரத்தினம் வெளியிட பேராசிரியர் ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் திருச்சியை சேர்ந்த ஐ.ஏ.ஆர்.ஏ., ஆராய்ச்சி அமைப்புடன் ஜி.டி.என். கல்லூரி ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. காந்தி கிராம பல்கலை. வேதியியல் துறை பேராசிரியர் ஆபிரகாம்ஜான், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவது குறித்தும், ஆராய்ச்சிக்கு நிதி பெறுவது குறித்தும் பேசினார். பேராசிரியர் பரமசிவன் ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்தல் குறித்து பேசினார். 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். பேராசிரியர் சுப்பிர மணி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in