கள்ளக்குறிச்சி அருகே - அண்ணா சிலைக்கு விஷமிகள் தீவைப்பு :

கள்ளக்குறிச்சி அருகே -  அண்ணா சிலைக்கு விஷமிகள் தீவைப்பு :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் திமுக கிளைக் கழகம் சார்பில் கடந்த 1978-ம் ஆண்டு முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி.பச்சையப்பன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அண்ணா சிலைதிறந்து வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. தேர்தல் நடத்தை விதிகளின்படி அண்ணா சிலை முழுவதுமாக மறைக்கப்பட்டு போலீஸாரால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை அண்ணா சிலை மீது மறைக்கப்பட்டிருந்த துணிகள் எரிந்து கருகியிருந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், திமுக ஒன்றியச் செயலர் எஸ்.பி.அரவிந்தனுக்கு தகவல் அளித்தனர், அவர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் மற்றும் போலீஸார் உதவியுடன் சிலையில் எரிந்து கருகிய பகுதிகளை தண்ணீரால் கழுவி தூய்மைப்படுத்தினார்.

சிலைக்குத் தீ வைத்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in