‘வாக்குப்பதிவு தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்காவிட்டால் நடவடிக்கை' :

‘வாக்குப்பதிவு தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்காவிட்டால் நடவடிக்கை' :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும்சுகாதார இணை இயக்குநர் புகழேந்தி நேற்று கூறும்போது, "சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுநாளான வரும் 6-ம் தேதி, தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்புவழங்க வேண்டும். அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற் சாலை நிர்வாகிகளும், தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் தொழிற்சாலைகள் மீது குற்ற நடவடிக்கை தொடரப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in