வருமான வரி சோதனையைக் கண்டித்து - திமுக, கூட்டணி கட்சியினர் திருத்துறைப்பூண்டியில் மறியல் :

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட திமுக, கூட்டணி கட்சியினர்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட திமுக, கூட்டணி கட்சியினர்.
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வரு மான வரி சோதனை நடத்தியதைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் நடைபெற்ற இந்த மறியலில் முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், திமுக நகரச் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ஐ.வி.நாகராஜன் உட்பட திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத் தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி பழனிசாமி, மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in