தி.மலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி :

திருவண்ணாமலை தாமரை குளத்தில் நடைபெற்ற பாலிகை விடுதல் நிகழ்ச்சியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்.
திருவண்ணாமலை தாமரை குளத்தில் நடைபெற்ற பாலிகை விடுதல் நிகழ்ச்சியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்ம னுக்கு திருக்கல்யாண வைபவம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. பின்னர், மண்டகபடி, நலங்கு உற்சவம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து, திருக்கல்யாண உற்சவ நிறைவு நாளான நேற்று திருவண்ணாமலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது அங்குள்ள மண்டபத்தில், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். அவர்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in