புதுச்சேரியைப்போல் தமிழகத்தை மாற்ற பாஜக முயற்சி : காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கருத்து

புதுச்சேரியைப்போல் தமிழகத்தை மாற்ற பாஜக முயற்சி :  காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கருத்து
Updated on
1 min read

``புதுச்சேரியைப்போல் தமிழக த்தையும் மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது” என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப் பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபிமனோகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நாங்குநேரியில் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக தலைமை யில் மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. அதேநேரத்தில், எதிர்முனையில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்த ஊழல்களால் அவர்களை அடிபணிய வைத்து பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கூட கிடையாது. ஆனாலும், தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பாஜக ஆட்சி நடத்துகிறது. புதுச்சேரியைப்போல் தமிழகத்தையும் மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் எதிர்க்கட்சி களையும், எதிர்க்கட்சி தலைவர் களையும் பாஜக மிரட்டுகிறது.

ஆனால், தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழகத்தில் பொருளாதாரம் மிகவும் சீரழிந்துவிட்டது. வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வில்லை. 10 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை செயல்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. இப்பகுதியில் எவ்விதமான வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. வாழை விவசாயம் அதிகம் நடை பெறும் இப்பகுதியில் அதை பாது காக்கும் குளிர்பதன கிடங்கு வசதியை ஏற்படுத்தவில்லை. இதுபோல், தமிழகம் முழுவதும் வளர்ச்சிக்கான திட்டங்களை அதிமுக செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in