டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு :

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள், அதையொட்டியுள்ள பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல்களில் அமைந்துள்ள பார்கள் அனைத்தையும் மூட வேண்டும்.

இதை மீறி மதுக்கடை, பார்களை திறப்போர் மற்றும் மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in