காங். வேட்பாளர் மீது - அதிமுக எம்எல்ஏ புகார் :

காங். வேட்பாளர் மீது  -  அதிமுக எம்எல்ஏ புகார் :
Updated on
1 min read

தென்காசி தொகுதி எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான செல்வமோகன்தாஸ் பாண்டியன் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனு விவரம்:

எனது மனைவி ஜெகதா பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

நான் தேர்தலில் போட்டியிடுவதால் எனது மனைவி தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது என்ற நடைமுறை விதிகளின்படி, அவருக்கு தேர்தல் பணிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

ஆனால், தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி, திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஆகியோர் எனது மனைவி வேண்டுமென்றே தேர்தல் பணியை புறக்கணித்து இருப்பதாகவும், அரசு ஆசிரியர்களை மிரட்டி நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மிரட்டுவதாகவும் பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். எனக்கு வாக்களிக்க நினைக்கும் வாக்காளர்களை பொய்யான குற்றச்சாட்டை கூறி திசை திருப்பும் வகையிலும், எனது வெற்றியை குலைக்கும் வகையிலும் செயல்படும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in