

திமுக துணை பொதுச் செயலாலாளர் ஆ.ராசா உதகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆளுமையையும், தமிழக முதல்வர் பழனிசாமியின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி, உவமானமாக தேர்தல் பரப்புரையில் நான்பேசிய சில வரிகளை மட்டும்எடுத்து, அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தவறாக சித்தரிக்கப்படுவதை ஏற்கெனவே நான் விளக்கியுள்ளேன்.
முதல்வர் குறித்தோ, அவரதுதாயார் புகழுக்கோ களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை. இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றி மட்டுமே நான்பேசினேன். நானும், ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன்.
இதற்கு பிறகும், முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டுதவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்தில் இருந்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் ஒருபடி மேலேபோய் முதல்வரை அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியேகாயம்பட்டதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்துக்கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை.
ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். என் மீது தொடுக்கப்பட்ட ‘2ஜி’ வழக்கை விசாரித்த நீதிபதி சைனி, தனது தீர்ப்பின் கடைசி பக்கத்தில் இந்த வழக்கு எப்படி புனையப்பட்டது என்பதை நான்கு ஆங்கில வார்த்தைகளால் முடித்தார். ‘Misreading, Selective reading, Non-reading and Out of Context reading of files’ என்று குறிப்பிட்டார். கோப்புகளை தவறாக படித்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கோப்புகளை படித்ததாலும், சில கோப்புகளை படிக்காமல் விட்டதாலும், சில கோப்புகளை இடப்பொருத்தமற்று படித்ததாலும் ஏற்பட்டதே இந்த வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட எனது 40 நிமிட உரையை முழுமையாக நீங்கள் கேட்டால், இதே தீர்ப்பை நீங்கள் வழங்குவீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.