ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி : சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது தடியடி :

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி : சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது  தடியடி :
Updated on
1 min read

இந்நிலையில், பணம் செலுத்தி ஏமாந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் திருவேற்காடு வேலப்பன்சாவடியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த திருவேற்காடு போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்துபோகுமாறு தெரிவித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்ல மறுத்ததுடன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் லேசான தடியடி நடத்தி, 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in