பிரச்சாரத்தின் போது திமுகவினரிடையே மோதல் : சமரசம் செய்த இந்திய கம்யூ. வேட்பாளர்

பிரச்சாரத்தின் போது திமுகவினரிடையே மோதல் :  சமரசம் செய்த இந்திய கம்யூ. வேட்பாளர்
Updated on
1 min read

சிவகங்கை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன் வாக்குச் சேகரிக்க சென்றபோது, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் களை வேட்பாளர் சமரசப் படுத்தினர்.

சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதனும், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குணசேகரனும் போட்டியிடுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட் பாளர் குணசேகரன் சிவ கங்கை அருகே புதுப்பட்டி, கோமாளிப்பட்டி, சக்கந்தி, பாசங்கரை, முடிகண்டம், குமாரப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார்.அப்போது முடிகண்டத்தில் உள்ளூர் திமுக நிர்வாகிகள், வேட்பாளரின் பிரச்சாரம் குறித்து தங்களுக்கு முறையாகத் தகவல் சொல்ல வில்லை என்று கூறி ஒன்றிய நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

ஒன்றிய நிர்வாகிகள் வந்ததற் கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை வேட்பாளர் குணசேகரன் சமரசப் படுத்தினார்.

திமுகவின் உட்கட்சி பிரச்சினையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று வேட்பாளரின் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in