கிள்ளை பகுதியில் முகத்துவாரம் தூர்வாரப்படும் : சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியன் வாக்குறுதி

கிள்ளை பகுதியில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிள்ளை பகுதியில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Updated on
1 min read

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கூட்டணிக்கட்சியினருடன் நேற்றுகிள்ளை பகுதியில் வாக்கு சேகரித்தார். பில்லுமேடு, சின்னவாய்க் கால், பட்டறையடி, எம்.ஜி.ஆர்.நகர், கிள்ளை கடைத்தெரு, முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர் திட்டு, முடசல் ஓடை, சூரியாநகர், கூழையார், பொன்னந்திட்டு, சிங் காரக்குப்பம் சுசில்நகர், கலைஞர் நகர், மானம்பாடி, கிள்ளை தளபதிநகர், மானம்பாடி ஆகிய பகுதிகளில் பாண்டியன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார். அப்போது பல இடங்களில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மாலை அணிவித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர் கலைமணி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சசிக்குமார் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது அதிமுக வேட்பாளர் பாண்டியன் பேசியதாவது:

இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். முகத்துவாரங்கள் தூர் வாரப்படும். மீனவர் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாஷிங்மெஷின் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் கிடைத்திட பழனிசாமி முதல்வராக எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாஷிங்மெஷின் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் கிடைத்திடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in