வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு :
Updated on
1 min read

திருச்செங்கோடு விவே கானந்தா மகளிர் கல்லூரியில்வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் இங்கு எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான அளவீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியை நாமக்கல்மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் ஆய்வுசெய்தார். வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான அளவீடு செய்து ஒட்டுவில்லைகள் ஒட்டப் பட்டுள் ளதையும், பாதுகாப்பு அம்சங் களையும் ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in