தாய், மகள் தற்கொலை சுரண்டை இளைஞர் கைது :

தாய், மகள் தற்கொலை சுரண்டை இளைஞர் கைது  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கருவந்தாவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி தெய்வக்கனி(45). இவரது மகள் கலையரசி(23). இவர், சுரண்டையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் தெய்வக்கனி, அவரது மகள் கலையரசி ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இவ்வழக்கில் சுரண்டை வரகுணராமபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை ஊத்துமலை போலீஸார் கைது செய்தனர்.

“பாஸ்கர் மற்றும் கலையரசி காதலித்துள்ளனர். இந்த காதலுக்கு கலையரசியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காதலை கைவிட்ட பாஸ்கர், கலையரசிக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், மன வேதனையில் கலையரசி தனது தாயாருடன் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது” என, போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in