குறுக்குத்துறை முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் :

குறுக்குத்துறை முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு   அலங்காரம் செய்யப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண்
குறுக்குத்துறை முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சண்முகருக்கு வருஷாபிஷேக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு சுவாமி சுப்பிரமணியர் திருநெல்வேலி டவுனுக்கு எழுந்த ருளும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி திருப்பணி முக்கில் சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாளை (28-ம் தேதி) காலை 9 மணிக்கு காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு திருக்கோயிலில் திருக்கல்யாணம் நடை பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in