தச்சுத் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை :

தச்சுத் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள்  சிறை தண்டனை :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து சுண்டிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(40). தச்சுத் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமிக்கு கடந்தாண்டு மார்ச் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸார் முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in