பெரம்பலூரில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை :

பெரம்பலூரில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை  :
Updated on
1 min read

பெரம்பலூர் நகரில் பிரபல கஞ்சா வியாபாரி நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பெரம்பலூர் சங்குப்பேட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் செங்கோட்டுவேல்(28). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது, பெரம்பலூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த செங்கோட்டுவேல் அண்மையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று நடந்து சென்ற செங்கோட்டுவேலை, அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது. இதில், பலத்த காயமடைந்த செங்கோட்டுவேல் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரம்பலூர் போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in