மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் தளிக்கோட்டை வீரருக்கு தங்கப்பதக்கம் :

மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் தளிக்கோட்டை வீரருக்கு தங்கப்பதக்கம் :
Updated on
1 min read

சென்னை ரைபிள் கிளப் சார்பில் 46-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் சென்னை அருகே உள்ள அலமாத்தி மைதானத்தில் அண்மை யில் 3 நாட்கள் நடைபெற்றன.

பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டி களில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார்(44) டிராப் பிரி வில் 36 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

அவருக்கு அலமாத்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் சங்க துணைத் தலைவர் ராஜகோபால் தொண்டைமான், சென்னை ரைபிள் கிளப் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தங்கப் பதக்கம் வழங்கி, பாராட்டினர். இந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றதன் மூலம் சென்னையில் மார்ச் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் நடைபெறவுள்ள தென்மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடும் சாம்பியன் போட்டிகளில் தமிழகம் சார்பில் முத்துக்குமார் பங்கேற்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in